இந்தி கட்டாயம் இல்லை: வரைவு அறிக்கையில் திருத்தம் செய்த மத்திய அரசு!?

 

இந்தி கட்டாயம் இல்லை: வரைவு அறிக்கையில் திருத்தம் செய்த மத்திய அரசு!?

பள்ளிகளில் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில்,  இந்தி கட்டாயம் அல்ல என்று வரைவு அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது

பள்ளிகளில் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில்,  இந்தி கட்டாயம் அல்ல என்று வரைவு அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

school

மத்திய அரசு புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு திட்டத்தில் மும்மொழி கொள்கையை அமல்படுத்தி இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை கட்டாய பாடமாக்கும் முயற்சியில் இறங்கியது.  எடுத்துக்காட்டாகத் தமிழ்நாடு என்றால் தமிழ், ஆங்கிலம், இந்தி என்று  இருக்க வேண்டும் என்றும் இந்தி மொழி பேசும் மாநிலங்களில், இந்தி, ஆங்கிலம் தவிரப் பிற பகுதிகளில் ஏதேனும் ஒரு மொழியைக் கூடுதலாகக் கற்பிக்கப்படும் பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

school

இந்தி திணிப்பு கொள்கையை அரசு கைவிட வேண்டும் என்று வலைதளவாசிகள் #StopHindiImposition, #TNAgainstHindiImposition போன்ற ஹேஷ்டேக்குகளை பதிவிட்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். 

இந்நிலையில், ‘இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயமாகப் பயிற்றுவிக்கப்படும் என்ற பரிந்துரை நீக்கப்பட்டுள்ளது. விருப்பத்தின் அடிப்படையில் மூன்றாவது மொழியை மாணவர்களே தேர்வு செய்யலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் இந்தி மொழியைக் கட்டாயமாகக் கற்க வேண்டிய அவசியமில்லை’ என்று திருத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கை வரைவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.