‘இந்தி கட்டாயமில்லை’ : இசைப்புயலின் மாஸ் ட்வீட்!

 

‘இந்தி கட்டாயமில்லை’ : இசைப்புயலின் மாஸ் ட்வீட்!

தமிழகத்தில் இந்தி கட்டாயம் அல்ல என்ற வரைவு அறிக்கை திருத்தத்திற்கு  இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வரவேற்பு தெரிவித்துள்ளார்.  

சென்னை:  தமிழகத்தில் இந்தி கட்டாயம் அல்ல என்ற வரைவு அறிக்கை திருத்தத்திற்கு  இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வரவேற்பு தெரிவித்துள்ளார்.  

hindi

மத்திய அரசு புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு திட்டத்தில் மும்மொழி கொள்கையை அமல்படுத்தி இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியைக் கட்டாய பாடமாக்கும் முயற்சியில் இறங்கியது.  எடுத்துக்காட்டாகத் தமிழ்நாடு என்றால் தமிழ், ஆங்கிலம், இந்தி என்று  இருக்க வேண்டும் என்றும் இந்தி மொழி பேசும் மாநிலங்களில், இந்தி, ஆங்கிலம் தவிரப் பிற பகுதிகளில் ஏதேனும் ஒரு மொழியைக் கூடுதலாகக் கற்பிக்கப்படும் பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், ‘இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயமாகப் பயிற்றுவிக்கப்படும் என்ற பரிந்துரை நீக்கப்பட்டுள்ளது. விருப்பத்தின் அடிப்படையில் மூன்றாவது மொழியை மாணவர்களே தேர்வு செய்யலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் இந்தி மொழியைக் கட்டாயமாகக் கற்க வேண்டிய அவசியமில்லை’ என்று திருத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கை வரைவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள  இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது டிவிட்டர் பக்கத்தில், அழகிய தீர்வு,   ”தமிழகத்தில் இந்தி கட்டாயமல்ல… திருத்தப்பட்டது வரைவு!” என்று பதிவிட்டுள்ளார்.

 

முன்னதாக இந்தி திணிப்பு கூடாது என்று வலைதளவாசிகள் போர்க்கொடி தூக்க, தன்  பங்கிற்கு, ஏ.ஆர். ரஹ்மான் பஞ்சாபிலும் தமிழ் பரவுவதாக ட்வீட் செய்ததோடு, மரியான் படப் பாடலை பஞ்சாபி ஒருவர் பாடும் வீடியோவையும் இணைத்திருந்தது  குறிப்பிடத்தக்கது.