இந்திய வங்கிகளில் 31,898 கோடி மோசடி!
Sep 10, 2019, 11:53 IST1568096613000
2019 இந்த முதல் காலாண்டிலே இந்திய வங்கிகளில் ரூ.31,898 கோடி பண மோசடி செய்யப்பட்டுள்ளது.
2019 இந்த முதல் காலாண்டிலே இந்திய வங்கிகளில் ரூ.31,898 கோடி பண மோசடி செய்யப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவலின் படி, இந்த ஆண்டின் காலாண்டில் மட்டுமே பாரத் ஸ்டேட் வங்கி உட்பட 18 பொதுத்துறை வங்கிகளில் 2,480 பண மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. ஸ்டேட் வங்கியில் 1,197 பண மோசடி வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
மேலும், அலகாபாத் வங்கியில் ரூ. 2,855 கோடி பண மோசடியும், பஞ்சாப் வங்கியில் ரூ.2,526 கோடி மோசடியும் மற்றும் அதிக பட்சமாக பாரத் வங்கியில் மட்டுமே ரூ.12,013 கோடி மோசடி நடந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது.