இந்திய சொத்துகளை விற்று ஏப்பம் விடுகிறாரா மோடி..? அதிர வைக்கும் உண்மை..!

 

இந்திய சொத்துகளை விற்று ஏப்பம் விடுகிறாரா மோடி..? அதிர வைக்கும் உண்மை..!

இடக்கையிலிருந்து வலக்கையிற்கு மாறினால் என்ன அற்புதம் நிகழும் ? ஆனால் தனியார் நிறுவனங்களுக்கு விற்றால் …

2014 முதல் மோடி அரசு சுமார் ரூ.24,000 கோடி ஏர் இந்தியாவில் முதலீடு செய்துள்ளது. பலன் ரூ. 20000 கோடி நஷ்டம். எவ்வளவுதான் தாங்கி பிடிப்பது? ஏர் இந்தியா உறுப்படுவதாக தெரியவில்லை. வாங்குபவர்களுக்கு முதலில் நிறைய நஷ்டம் கொடுக்கலாம். bharath

எப்படி இந்த நிறுவனத்தை லாபம் ஈட்டும் வழியில் கொண்டு செல்வது என்று தலையை பியித்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். ஏர் இந்தியா முள்ளில் மேல் பட்டு துணி அடுத்தது பர்மா ஷெல்லிடம் இருந்த BPCL1976 ல் அரசுடமை ஆக்கப்பட்டது. சுமார் இருபது சதவிகிதம் இந்தியாவினுடைய எரிபொருள் தேவை BPCL மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. BPCL கம்பெனியில் அரசாங்கத்தின் தற்போதைய பங்கு 53 சதவிகிதம். சரி இதை விற்பது எப்படி நடக்கும்..?

 போன வருடம் HPCL கம்பெனியின் பங்குகளை மற்றொரு பொதுத்துறை நிறுவனமான ONGC க்கு விற்றதில் பெரிய மாற்றம் ஒன்றும் நிகழவில்லை. அதே போல BPCL யும் வேறு ஒரு பொதுத்துறை நிறுவனத்திற்கு விற்றால் ஒன்றும் நடக்க போவதில்லை. இடக்கையிலிருந்து வலக்கையிற்கு மாறினால் என்ன அற்புதம் நிகழும் ? ஆனால் தனியார் நிறுவனங்களுக்கு விற்றால் (அம்பானியைவிட சவூதி அராம்கோ, எக்சோன் மொபில், டோடல் பிரான்ஸ் , குவைத் பெட்ரோலியம் எல்லோரும் கியூவில் நிற்கிறார்கள்) அரசிற்கு சுமார் 60000 கோடி தேறும்.modi

ஆனால் அதெற்கெல்லாம் நேரமில்லை. இருக்கும் நிலையில் இதுவும் HPCL போல இந்திய பொது துறை நிறுவனத்திற்கே போகும். அதற்குள் என்னமோ இந்திய சொத்துகளை மோடி விற்று ஏப்பம் விட்டது போல கூச்சல்.