இந்திய அணியின் மிகப்பெரும் பலம் இது தான்; இயான் சேப்பல் கணிப்பு !!

 

இந்திய அணியின் மிகப்பெரும் பலம் இது தான்; இயான் சேப்பல் கணிப்பு !!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி, பந்துவீச்சில் முழு பலத்துடன் உள்ளதாக கிரிக்கெட் உலகின் முன்னாள் ஜாம்பவான் இயான் சேப்பல் தெரிவித்துள்ளார். 

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி, பந்துவீச்சில் முழு பலத்துடன் உள்ளதாக கிரிக்கெட் உலகின் முன்னாள் ஜாம்பவான் இயான் சேப்பல் தெரிவித்துள்ளார். 

சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், அடுத்த சில தினங்களில் துவங்க உள்ளதால் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்னோடமாக நடத்தப்படும் பயிற்சி போட்டிகளில் அனைத்து அணிகளும் தீவிரமாக விளையாடி வரும் நிலையில், மறுபுறம் முன்னாள் வீரர்கள் பலர் உலகக்கோப்பை குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள கிரிக்கெட் உலகின் முன்னாள் ஜாம்பவான் இயான் சேப்பல், இந்திய அணியின் பந்துவீச்சு பலம் அனைத்து அணிகளுக்கும் சவாலாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். 

இது குறித்து பேசிய அவர், உலகக்கோப்பையில் விளையாடும் இந்திய அணியின் பந்து வீச்சு பலம் வாய்ந்ததாக இருக்கிறது. வெவ்வேறு வகையில் வீசக்கூடிய திறமை வாய்ந்த பவுலர்கள் அந்த அணியில் உள்ளனர் என்றார்.