இந்திய அணிக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது பாகிஸ்தான்!!

 

இந்திய அணிக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது பாகிஸ்தான்!!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான இன்றைய கிரிக்கெட் போரில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான இன்றைய கிரிக்கெட் போரில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மிக முக்கிய போட்டியான இன்றைய போட்டியில் பரம எதிரிகளாக பாவிக்கப்பட்டு வரும் இந்தியாவும் பாகிஸ்தானும் பலப்பரீட்சை செய்கிறது. 
மான்செஸ்டரில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் அஹமது முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். 
இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் ஷிகர் தவானுக்கு பதிலாக விஜய் சங்கர் அணியில் இடம்பெற்றுள்ளார். அதே வேளையில் பாகிஸ்தான் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டியிலும் களம் காண உள்ளனர். 
இந்திய அணி;

ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், விராட் கோஹ்லி, விஜய் சங்கர், கேதர் ஜாதவ், தோனி, ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், பும்ராஹ். 
பாகிஸ்தான் அணி; இமாம் உல் ஹக், ஃப்கர் ஜமான், பாசபர் அசாம், முகமது ஹபீஸ், சர்பராஸ் அஹமது,  சோயிப் மாலிக், இமாத் வசீம், ஷாதப் கான், ஹசன் அலி, வகாப் ரியாஸ், முகமது அமீர்.