இந்தியில் பேசினால் தான் இங்கே புரியுது.. திமுகவினரை வறுத்தெடுத்த துரைமுருகன்!

 

இந்தியில் பேசினால் தான் இங்கே புரியுது.. திமுகவினரை வறுத்தெடுத்த துரைமுருகன்!

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில், திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது. விழாவில் வீரமணி, ஆ.ராசா, சுப வீரபாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவில் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், இப்போதெல்லாம் ஓட்டல்களில் வட இந்தியர்கள் தான் அதிகமாக வேலை செய்வதாகவும் அவர்களுக்கு இந்தியில் பேசினால் மட்டுமே புரிவதாக தெரிவித்த துரைமுருகன், அதனால் எந்த மொழியும் கற்றுக் கொள்ளலாம் என்று கூறினார்.

duraimurugan

இங்கு வெள்ளையர்கள் வரவில்லை என்றால் சோமாலியா மக்கள் போல் இருந்திருப்போம் என்றும், வெள்ளையர்கள் தான் ஜனநாயகத்தை சொல்லிக் கொடுத்தவர்கள் என்றும் துரைமுருகன் பாராட்டு தெரிவித்து மேலும் பேசுகையில், இப்போதெல்லாம் திமுகவினர் வீடுகளிலே கூட தமிழில் பெயர் வைப்பதில்லை என்று ஆதங்கத்துடன் திமுகவினரை வறுத்தெடுத்தார்.