இந்தியா வலுப்பெற வாக்களியுங்கள்: கமல் குடியரசுத் தின மெசேஜ்

 

இந்தியா வலுப்பெற வாக்களியுங்கள்: கமல் குடியரசுத் தின மெசேஜ்

வலிமைமிக்க இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் வாக்களித்து உதவுங்கள் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னை : வலிமைமிக்க இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் வாக்களித்து உதவுங்கள் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் டுவீட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: 

இளம் மனதில் எப்போதும் ஓர் ஆசை பட்டியல் உள்ளது. அதில், வாக்களிக்க வேண்டிய அவசியத்தை மிக உயர்ந்த இடத்தில் வைக்க வேண்டும். என் நண்பர்கள் பலர் மோசமாக இருந்தனர். அவர்கள் வாக்களிக்கவில்லை என்பதால் தான், இப்போது நாம் விளைவுகளை அனுபவிக்கிறோம்.

வாக்களிக்கும் உரிமை நமது விதியை வடிவமைக்கிறது. ஆகவே, பொறுப்புடன் நாட்டின் சுதந்திரத்தை வடிவமைக்கத் தொடங்குவோம். ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் தங்களை இளைஞர்கள் இணைத்து கொண்டால், வலிமைமிக்க இந்தியாவை உருவாக்குவதற்கு உதவியாக இருக்கும் இவ்வாறு கமல்ஹாசன் அந்தப் பதிவில்  தெரிவித்துள்ளார்.

இதனிடையே தனியார் கல்லூரியில் கமல்ஹாசன் பேசும்போது, நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுமா என்பது அப்போது இருக்கும் சூழலை பொறுத்து முடிவு செய்யப்படும் என்றார்.