இந்தியா வருகிறார் இலங்கை புது அதிபர் கோத்தபய ராஜபக்ச! 

 

இந்தியா வருகிறார் இலங்கை புது அதிபர் கோத்தபய ராஜபக்ச! 

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச நவம்பர் 29ம் தேதி இந்தியா வருகை தரவுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்.

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச நவம்பர் 29ம் தேதி இந்தியா வருகை தரவுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்.

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பையேற்று இந்தியா வரும் கோத்தபய ராஜபக்ச, இந்திய ஜனாதிபதி, பிரதமர் உட்பட உயர்மட்ட அரசியல் பிரமுகர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் கோத்தபய ராஜபக்ச மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு பயணம் இதுவாகும். 

Gotabaya Rajapaksa

இந்நிலையில், பிரதமர் மோடியின் அழைப்பிதழுடன் இன்று  கொழும்பு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கர், ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவை நேரில் சந்தித்து அழைப்பிதழை வழங்கினார் இதனையடுத்து , வரும் 29ந் தேதி இலங்கை அதிபர் இந்தியா வர கோத்தபய ஒப்புக்கொண்டுள்ளார். 

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற மைத்திரிபால சிறிசேனவும், முதலாவது வெளிநாட்டு பயணமாக இந்தியா வந்துருந்தது குறிப்பிடத்தக்கது.