இந்தியா – மேற்கிந்திய தீவுகள் மோதும் மூன்றாவது டி20: இந்தியாவிற்கு 182 ரன்கள் இலக்கு!

 

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் மோதும் மூன்றாவது டி20: இந்தியாவிற்கு 182 ரன்கள் இலக்கு!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதல் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி, 181 ரன்கள் குவித்துள்ளது.

சென்னை: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதல் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி, 181 ரன்கள் குவித்துள்ளது.

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் மூன்றாவது டி20 போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்று, முதல் பேட்டிங்கை மேற்கிந்திய தீவுகள் அணி தேர்வு செய்தது. இத்தொடரின், முதல் இரண்டு டி20 போட்டிகளை ஏற்கனவே இந்தியா வென்றுவிட்ட நிலையில், இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் வென்றால், அந்த அணிக்கு ஆறுதல் வெற்றியாக அமையும்.

மேற்கிந்திய தீவுகளின் தொடக்க ஆட்டக்காரர்களான ஹோப் மற்றும் ஹெட்மயர் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால், சஹால் வீசிய பந்தில் ஹோப் 24 (22) மற்றும் ஹெட்மயர் 26 (21) ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து வந்த ராம்டின் 15 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

அதன்பின் ஜோடி சேர்ந்த டேரென் பிரவோவும், நிகோலஸ் பூரானும் அணியின் ரன்களை வேகமாக உயர்த்தினர். இறுதி வரை ஆட்டமிழக்காமல் பிரவோ 43 (37) மற்றும் பூரான் 53 (25) ரன்கள் குவித்த நிலையில், 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 3 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்துள்ளது. இதன்மூலம், அடுத்து இறங்கும் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.