இந்தியா-மேற்கிந்திய தீவுகள் இடையேயான 2-வது ஒரு நாள் போட்டி ட்ரா!
இந்தியா – மேற்கிந்தியா இடையேயான ஒரு நாள் போட்டி சமனில் முடிந்துள்ளது.
விசாகப்பட்டினம்: இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டி சமனில் முடிந்துள்ளது.
இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.
அப்போட்டியில், முதல் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர் முடிவில் 321 ரன்கள் சேர்த்தது. குறிப்பாக கேப்டன் விராட் கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 157 ரன்கள் குவித்திருந்தார்.
பின்னர் 322 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே நிதானமாக ஸ்கோர் செய்த வந்த நிலையில், ஷாய் ஹோப் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 123 ரன்கள் அடித்துள்ளார்.
It’s a tie in Vizag! What a match!
Shai Hope hits a four off the last ball to finish with a fantastic 123* and the scores are level! India remain 1-0 up in the series.#INDvWI scorecard ➡️ https://t.co/gVFbHbvkYh pic.twitter.com/mZ6w6h8Jnh
— ICC (@ICC) October 24, 2018
இந்நிலையில், இறுதி பந்தில் 5 ரன்கள் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த பந்தில் 4 ரன்களை அடித்து ஆட்டத்தை சமன் செய்துள்ளார் ஷாய் ஹோப்.
இதன்மூலம், இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையேயான 2வது ஒருநாள் போட்டி சமனில் முடிந்துள்ளது.