இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

 

இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கவுள்ளது

ஆமதாபாத்: இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கவுள்ளது.

இரண்டு டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவு அணி இந்தியா வந்துள்ளது. இந்தியா – மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று தொடங்குகிறது. இந்த தொடரில், 19 வயதான பிரித்வி ஷா அறிமுகமாக உள்ளார். மேற்கிந்தியத் தீவுகளைப் பொறுத்தவரை, 15 வீரர்களில் 5 பேர் மட்டுமே இதற்கு முன்பு இந்தியாவில் டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளனர்.

வெளிநாட்டு மண்ணில் ஆதிக்கம் செலுத்த முடியாத அணியாக இந்தியா இருந்தாலும், உள்ளூரில் தொடர்ச்சியாக 9 தொடரை கைப்பற்றி அசைக்க முடியாத அணியாக உள்ளது. 2012-ஆம் ஆண்டுக்குப் பின்னர் மேற்கிந்தியத் தீவுகள் அணி டெஸ்டில் பெரிய வெற்றியை பதிவு செய்ததில்லை. எனவே, இந்திய அணியை எதிர்கொள்வது அவர்களுக்கு சவாலாகவே இருக்கும்.

நவம்பர் மாதம் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இதனால் கடினமான அந்தத் தொடருக்கு ஆயத்தமாகும் விதமாக மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தற்போதைய டெஸ்ட் தொடரை இந்திய அணி வீரர்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளக்கூடும்.