இந்தியா மீது தாக்குதல் நடத்தினால் மறக்க முடியாத அளவு பதிலடி கொடுக்கப்படும்: வெங்கையா நாயுடு எச்சரிக்கை!

 

இந்தியா மீது தாக்குதல் நடத்தினால் மறக்க முடியாத அளவு பதிலடி கொடுக்கப்படும்: வெங்கையா நாயுடு எச்சரிக்கை!

இந்தியா மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டால் வாழ்நாளில் மறக்க முடியாத அளவுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு எச்சரித்துள்ளார். 

விசாகப்பட்டினம் : இந்தியா மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டால் வாழ்நாளில் மறக்க முடியாத அளவுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு எச்சரித்துள்ளார். 

kashmir

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்றார். அப்போது பேசிய அவர், இந்தியா  எந்தவொரு நாட்டையும்  அநாவசியமாகத் தாக்கியதில்லை.முதிர்ச்சி இல்லாத சில நாடுகள் தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தும். ஒருவேளை இந்தியா மீது தாக்குதல் நடத்த  திட்டமிட்டால் வாழ்நாளில் மறக்க முடியாத அளவுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும்’ என்றார்.

un

முன்னதாக காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால் அதிருப்தியில் இருக்கும் பாகிஸ்தானுக்குச் சீனாவைத் தவிர உலக நாடுகள் எதுவும் ஆதரவு தெரிவிக்கவில்லை. அதே போல் ஐ.நா கவுன்சிலும் இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என்று கூறிவிட்டதால் பாகிஸ்தான் இதுகுறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.