இந்தியா அபார பந்து வீச்சு: 104 ரன்களுக்கு சுருண்டது மேற்கிந்திய தீவுகள் அணி!

 

இந்தியா அபார பந்து வீச்சு: 104 ரன்களுக்கு சுருண்டது மேற்கிந்திய தீவுகள் அணி!

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 104 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகியுள்ளது.

திருவனந்தபுரம்: டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 104 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகியுள்ளது.

இந்தியா-மேற்கிந்திய தீவுகள் மோதும் 5-வது ஒருநாள் போட்டி கேரள மாநிலம் திருவந்தனபுரத்தில் நடைபெற்று வருகிறது.

அப்போட்டியில் டாஸ் வென்று மேற்கிந்திய தீவுகள் அணி முதல் பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக் காரர்களாக களமிறங்கிய கீரன் பவல், ஷாய் ஹோப் போன்ற நட்சத்திர ஆட்டக்காரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினர்.

அதன்பின் களமிறங்கிய ராவ்மன் பவல், மர்லான் சேமுவேல்ஸ், ஜேசன் ஹோல்டர் போன்ற வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இந்திய அணி தரப்பில் ரவிந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கலீல் அஹமது, பும்ரா இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இறுதியாக 31-வது ஓவரின் 5-வது பந்தில் 104 ரன்களுக்கு மேற்கிந்திய தீவுகள் அணி சுருண்டுள்ளது.

அதன்பின், 105 ரன்களை இலக்காக கொண்டு இந்திய அணி தற்போது களமிறங்கியுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும், ரோஹித் ஷர்மாவும் விளையாடி வருகின்றனர்.