இந்தியாவுக்கு டஃப் கொடுக்கும் தென்னாப்பிரிக்கா! 228 ரன்கள் இலக்காக நிர்ணயிப்பு!!

 

இந்தியாவுக்கு டஃப் கொடுக்கும் தென்னாப்பிரிக்கா! 228 ரன்கள் இலக்காக நிர்ணயிப்பு!!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்கு 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா அணி வெற்றி பெற 228 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்கு 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா அணி வெற்றி பெற 228 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

டாஸில் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. 36வது ஓவர்ரில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி டேவிட் மில்லர் 31 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.  இரண்டாவது பந்தை பும்ரா வீச ஆம்லா ரோகித் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஆட்டத்தின் ஆறாவது ஓவரில் தென்னாப்பிரிக்காவின் மற்றொரு தொடக்க வீரரான டீ காக் விக்கெட்டை பும்ரா கைப்பற்றினார். வான்டெர் டுசன் 22 ரன்கள் எடுத்த நிலையில், யுவேந்திர சாஹல் பந்தில் வெளியேறினார். ஃபாப் டு பிளசிஸ் 38 ரன்கள் எடுத்த நிலையில் 4வது விக்கெட்டாக வெளியே அனுப்பப்பட்டார். 5வது விக்கெட்டாக டுமினி முறையில் குல்தீபால் வெளியேற்றப்பட்டார். 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு மொத்தம் 227 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா அணி வெற்றி பெற 228 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.