இந்தியாவில் முதல் போராட்டம் தமிழகத்தில் துவங்கியது! காஷ்மீர் பிரச்சனையில் ஆளுநர் மாளிகை முற்றுகை!

 

இந்தியாவில் முதல் போராட்டம் தமிழகத்தில் துவங்கியது! காஷ்மீர் பிரச்சனையில் ஆளுநர் மாளிகை முற்றுகை!

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தும், இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப் படுவதாகவும் அமித்ஷா நேற்று மாநிலங்களவையில் அறிவித்தார். நாடு முழுவதும் இதற்குப் பலமான எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், இந்த பிரச்சனை குறித்து தமிழகத்தில் முதல் போராட்டம் வெடித்துள்ளது.

தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அலி, மனித நேய ஜனநாயகக் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி, விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவர் குடந்தை அரசன், எஸ்டிபிஐ அமீர் அம்சா, தமுமுக நெல்லை உஸ்மான்கான் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பின் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் சென்னையில் சைதாப்பேட்டையில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்றனர். ஆனால் அவர்களை 12.30 மணிக்கு போலீஸார் கைது செய்து வாகனங்களில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

Tamilnadu Protest

மாநிலங்களவையில் மசோதா நிறைவேறியதும், காஷ்மீர் முழுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால், அங்கு எந்தவிதமானப் போராட்டங்களும் எழவில்லை. இந்நிலையில் இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழகத்தில் இன்று போராட்டம் தொடங்கியுள்ளது.