இந்தியாவில் முதன்முதலில் 5ஜி ஸ்மார்ட்போனை வெளியிடப் போகும் நிறுவனம் எது தெரியுமா?

 

இந்தியாவில் முதன்முதலில் 5ஜி ஸ்மார்ட்போனை வெளியிடப் போகும் நிறுவனம் எது தெரியுமா?

இந்தியாவில் முதல் 5ஜி ஸ்மார்ட்போனை விவோவின் ஐகூ பிராண்டு அறிமுகம் செய்ய உள்ளது.

டெல்லி: இந்தியாவில் முதல் 5ஜி ஸ்மார்ட்போனை விவோவின் ஐகூ பிராண்டு அறிமுகம் செய்ய உள்ளது.

கடந்தாண்டு சீனாவில் விவோவின் ஐகூ பிராண்டு தொடங்கப்பட்டது. இதையடுத்து அந்நிறுவனம் சீனாவில் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களை அங்கு வெளியிட்டுள்ளது. இந்நிலையில், இந்திய ஸ்மார்ட்போன் சந்தையிலும் ஐகூ பிராண்டு காலடி வைக்க திட்டமிட்டுள்ளது. மேலும் இந்தியாவின் முதல் 5ஜி ஸ்மார்ட்போனை இந்நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. அடுத்த மாதம் விவோ ஐகூ புதிய 5ஜி ஸ்மார்ட்போனை களமிறக்கும் என்று தெரிகிறது.

இந்த நிறுவனம் அறிமுகம் செய்யவிருக்கும் 5ஜி ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் இடம்பெற்றிருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 5ஜி ஸ்மார்ட்போன் மட்டுமில்லாமல் உயர்ரக 4ஜி ஸ்மார்ட்போன்களையும் விவோ ஐகூ நிறுவனம் அறிமுகம் செய்ய ஏற்பாடுகள் செய்து வருகிறது. முதலில் ஆன்லைன் சந்தையிலும், அதன் பின் நேரடியாக கடைகளிலும் கிடைக்கும் வகையில் இந்நிறுவனத்தின் சாதனங்கள் விற்கப்பட உள்ளன.