இந்தியாவில் பிரமாண்ட அலுவலகத்தை திறந்துள்ள அமேசான்! 

 

இந்தியாவில் பிரமாண்ட அலுவலகத்தை திறந்துள்ள அமேசான்! 

பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் தனது பிரமாண்டமான கிளை நிறுவனத்தை ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது.

பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் தனது பிரமாண்டமான கிளை நிறுவனத்தை ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது.

சுமார்  9.5 ஏக்கர் பரப்பளவில் திறக்கப்பட்டுள்ள அமேசான் நிறுவனத்தில் சுமார் 15 ஆயிரம் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக கட்டப்பட்ட இந்த வளாகத்தை  தெலுங்கானா உள்துறை அமைச்சர் முகமது அலி, அமேசான் துணைத் தலைவர் ஜான் ஸ்காட்லெர் மற்றும் அமேசான் இந்தியாவின் துணைத் தலைவர் அமித் அகர்வால் ஆகியோர் திறந்துவைத்தனர்.

amazon

இந்த வளாகத்தில் தாய்மாருக்கான பிரத்யேக அறை, ஓய்வு மற்றும் குளியலைறைகள், பிராத்தனை கூடங்கள், ஹெலிபேட், கஃபேடேரியா, ஜிம் என அனைத்து வசதிகளும் உள்ளன. வளாக பரப்பளவைப் பொறுத்தவரையில் உலகிலேயே மிகப்பெரிய நிறுவன வளாகம் என்ற பெருமையை இந்த ஹைதராபாத் அமேசான் வளாகம் பெற்றுள்ளது.