இந்தியாவில் கொரோனா வைரஸ் சோதனையை அதிகப்படுத்த வேண்டும் – பிரியங்கா காந்தி
இந்தியாவில் கொரோனா வைரஸ் சோதனையை அதிகப்படுத்த வேண்டும் என பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் சோதனையை அதிகப்படுத்த வேண்டும் என பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
கொரோனா வைரஸுக்கான சோதனை விகிதத்தை இந்தியா உடனடியாக உயர்த்த வேண்டியது அவசியம் என்றும், முடிவுகளைத் தருவதற்கு அரசாங்கம் இப்போது செயல்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ரா தெரிவித்தார்.
It is imperative that India immediately ramps up its rate of testing. Extremely valuable information about the severity of the disease, disease clusters and focal points is gained from testing. In order for this lockdown to yield results, it has to be backed up..1/2#MoreTesting
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) April 4, 2020
நோயின் தீவிரம், நோய்க் கொத்துகள் மற்றும் மையப் புள்ளிகள் பற்றிய மிக மதிப்புமிக்க தகவல்கள் பரிசோதனையிலிருந்து தான் பெறப்படுகின்றன என்று அவர் கூறினார். செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் கிடைக்கவில்லை என்றும் அவர்களின் சம்பளத்தை குறைப்பதாகவும் பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில், மருத்துவ ஊழியர்களுக்கு அனைத்து ஒத்துழைப்பும் தேவை என்று பிரியங்கா காந்தி தெரிவித்தார்.