இந்தியாவில் கொரோனா வைரஸ் தேசியப் பேரிடராக அறிவிப்பு – ரூ.4 லட்சம் வரை நிவாரண தொகை

 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தேசியப் பேரிடராக அறிவிப்பு – ரூ.4 லட்சம் வரை நிவாரண தொகை

இந்தியாவில் கொரோனா வைரஸ் தேசியப் பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தேசியப் பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85-ஆக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் கலபருகி பகுதியில் ஒரு முதியவர் மற்றும் டெல்லியை சேர்ந்த ஒரு மூதாட்டி என இதுவரை 2 பேர் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உயிரிழந்துள்ளனர்.

ttn

இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸை மத்திய அரசு தேசியப் பேரிடராக இன்று அறிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ செலவினங்கள் மற்றும் நிவாரணத் தொகையாக அதிகபட்சம் ரூ.4 லட்சம் ரூபாய் வரை வழங்கவும் மாநில அரசுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.