இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 46,433 ஆக அதிகரிப்பு

 

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 46,433 ஆக அதிகரிப்பு

சீனாவில் கடந்த  ஆண்டு டிசம்பர் மாதம் உருவான  கொரோனா வைரஸ் தற்போது  200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் வரும்  மே 17 ஆம் தேதி வரை 144  தடை உத்தரவை நீட்டித்து மத்திய  அரசு  உத்தரவு  பிறப்பித்துள்ளது. கொரோனா தொற்று அதிகமுள்ள சிவப்பு மண்டலங்களில் கூடுதலாக சில தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. 

coronavirus

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால், “இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 46 ஆயிரத்து 433 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,900 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 195 பேர் உயிரிழந்த நிலையில் 1020 பேர் குணமடைந்தனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 195 பேர் உயிரிழந்துள்ளனர்” என தெரிவித்தார்.