இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டியது!

 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டியது!

சீனாவில் கடந்த  ஆண்டு டிசம்பர் மாதம் உருவான  கொரோனா வைரஸ் தற்போது  200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் வரும்  மே 17 ஆம் தேதி வரை 144  தடை உத்தரவை நீட்டித்து மத்திய  அரசு  உத்தரவு  பிறப்பித்துள்ளது. கொரோனா தொற்று அதிகமுள்ள சிவப்பு மண்டலங்களில் கூடுதலாக சில தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 39,980 லிருந்து 40,263 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 10,887  பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை  1,306 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,644 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 83 பேர் உயிரிழந்துள்ளனர்.