இந்தியாவில் கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்கியது!

 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்கியது!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்  இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. கொரோனாவை கட்டுபடுத்தும் முயற்சியில் இறங்கியுள்ள மத்திய, மாநில அரசுகள்  நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர். கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மே. 3 ஆம் தேதி வரை நீட்டிக்கபட்டடுள்ளது. ஊரடங்கை மேலும் நீட்டிப்பது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இதையடுத்து இந்தியாவில் கொரோனா வைரஸ் 3ஆம் கட்ட சமூக பரவலுக்கு செல்வது பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.

coronavirus

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்குகிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29, 974 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவில் இருந்து 7,027 பேர் குணமடைந்துள்ள நிலையில் 937 பேர் உயிரிழந்துள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை1594 ஆக உள்ளது. கொரோனாவால் 51 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில் தரமற்ற உபகரணங்களை கொடுத்த சீன நிறுவனங்களிடம் இருந்து இனி எந்தப் பொருளும் வாங்கப்படாது என்றும் சீன நிறுவனங்களிடம் இருந்து இனி எந்தப் பொருளும் வாங்கப்படாது என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.