இந்தியாவில் கொரோனா பாதிப்பு லட்சத்தை தாண்டியது!

 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு லட்சத்தை தாண்டியது!

மே 18  ஆம் தேதிக்கு பிறகும்  144 தடை உத்தரவு  நீட்டிக்கப்படும் என  மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதுவரை உலகம் முழுவதும்48   லட்சத்து ஆயிரத்து 282  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 3லட்சத்து 18  ஆயிரத்து 465 பேர்  பலியாகி  உள்ளனர் . மேலும் 17  லட்சத்து 86  ஆயிரத்து 829 பேர்   குணமாகியுள்ளனர். இதனால்  பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

 

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் மே 18  ஆம் தேதிக்கு பிறகும்  144 தடை உத்தரவு  நீட்டிக்கப்படும் என  மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை  1,01,139  ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 39,174 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,163  ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.