இந்தியாவில் கொரோனா தொற்று: உயிரிழந்தோர் எண்ணிக்கை 872 ஆக அதிகரிப்பு!

 

இந்தியாவில் கொரோனா தொற்று: உயிரிழந்தோர் எண்ணிக்கை 872 ஆக அதிகரிப்பு!

கொரோனாவை கட்டுபடுத்தும் முயற்சியில் இறங்கியுள்ள மத்திய, மாநில அரசுகள்  நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர். 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்  இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.  கொரோனாவை கட்டுபடுத்தும் முயற்சியில் இறங்கியுள்ள மத்திய, மாநில அரசுகள்  நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர். 

tt

கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி வரை முதற்கட்டமாக நீட்டிக்கபட்ட ஊரடங்கு மீண்டும் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மீண்டும் ஊரடங்கை  வரும் மே 3 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளார். இதையடுத்து இந்தியாவில் கொரோனா வைரஸ் 3ஆம் கட்ட சமூக பரவலுக்கு செல்வது பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து  கொரோனா பரவலை தடுக்க  அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி இன்று  அனைத்து மாநில முதல்வர்களுடனும் இன்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

tt

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,917 லிருந்து 27,892 ஆக உயர்ந்துள்ளது.  அதேபோல உயிரிழந்தோர் எண்ணிக்கை 826 லிருந்து 872 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 5,914 லிருந்து 6,185 ஆகவும்  உயர்ந்துள்ளது.