இந்தியாவில் கொரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு

 

இந்தியாவில் கொரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 47 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். மொத்தம் இதுவரை 9 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 1 லட்சத்து 94 ஆயிரம் பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர். சீனாவில் கொரோனா பாதிப்பு பரவத் தொடங்கினாலும் தற்போது அந்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கிட்டத்தட்ட முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவை காட்டிலும் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.

india

இந்தியாவில் கொரோனா தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் நிலைமை கொஞ்சம் பரவாயில்லை என்பது போல் உள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41இல் இருந்து 50 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1,834இல் இருந்து 1,965-ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு அந்நோயிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 151 ஆக உள்ளது.