இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 315 ஆக உயர்வு!
இதுவரை 289 பேர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில் 22 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் சுமார் 173 நாடுகளில் பரவியுள்ளது. இதுவரை 3 லட்சத்து 7ஆயிரத்து 625 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியது.
இந்நிலையில் இந்தியாவில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 315 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகா,டெல்லி, மகாராஷ்டிரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் உயிரிழந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் உயிரிழந்தார். இதுவரை 289 பேர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில் 22 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.