இந்தியாவில் கொரோனாவுக்கு பலி 10 ஆக உயர்வு

 

இந்தியாவில் கொரோனாவுக்கு பலி 10 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 10-ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 10-ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது. ஆனால் சீனாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை குறைந்து விட்டது. இதுவரை 190-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸால் இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.பலியானோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது.

coronavirus patient

இதுவரை கொரோனா வைரசால் இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 500ஐ நெருங்கியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மும்பை கஸ்தூரிபாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 65 வயதான நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.