இந்தியாவில் கொரானாவுக்கு 76 வயது முதியவர் பலி!

 

இந்தியாவில் கொரானாவுக்கு  76 வயது முதியவர் பலி!

கொரோனா அறிகுறி இருந்ததாக கூறப்படும் நிலையில் சந்தேகத்தின் பேரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளது. சீனாவிற்கு அடுத்தபடியாக இத்தாலியில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அதேபோல் தற்போது இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இதுவரை 60 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

ttn

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று உள்ளதாக சிகிச்சை பெற்று வந்த 76 வயது முதியவர் கொரோனவால் பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலம் கல்புர்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 76 வயது முதியவர் முகமது உசேன் சித்திக் சவுதியிலிருந்து நாடு திரும்பியுள்ளார்.  அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததாக கூறப்படும் நிலையில் சந்தேகத்தின் பேரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

ttn

தற்போது முகமது உசேன் சித்திக் சிகிச்சை பலனின்றி இன்று  உயிரிழந்துள்ளார். இருப்பினும் அவரது மரணத்திற்கான காரணத்தை உறுதி செய்ய மருத்துவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். அப்படி உறுதியாகும் பட்சத்தில் இந்தியாவில் கொரோனாவுக்கு முதல் பலி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.