இந்தியாவிலேயே முதல்முறையாக அரசு பள்ளிகளில் பேஸ் ரீடிங் முறை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

 

இந்தியாவிலேயே முதல்முறையாக அரசு பள்ளிகளில் பேஸ் ரீடிங் முறை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களின் முகத்தை அடையாளம் கண்டு வருகைப்பதிவு செய்யும் முறை பள்ளியில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களின் முகத்தை அடையாளம் கண்டு வருகைப்பதிவு செய்யும் முறை  பள்ளியில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களின் வருகையை, வருகை பதிவேடுக்கு பதில் கைரேகையை கொண்டு கணக்கிடும் முறை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

அதேபோல், தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள் எளிதில் ஆங்கிலம் கற்க வழிவகுக்கும் வகையில் வெளிநாடுகளிலிருந்து கல்வியாளர்கள் வரவழைக்கப்பட்டு பயிற்சியளிக்கப்படும் எனவும் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். 

sengottaiyan

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் மாணவா்களின் வருகையை பேஸ் ரீடிங் முறையில் பதிவுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது. இந்த திட்டம் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில், மாணவர் முகத்தை அடையாளம் கண்டு வருகைப்பதிவு கணக்கு செய்யப்படும் என்றும், இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை அசோக்நகர் அரசு பள்ளியில் டிசம்பர் 10-ஆம் தேதி பதிய முறை அறிமுகமாகிறது எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.