இந்தியாவிலேயே மருத்துவச் சிகிச்சையில் தமிழகம் முதன்மையாக விளங்குகிறது- முதலமைச்சர் பழனிசாமி

 

இந்தியாவிலேயே மருத்துவச் சிகிச்சையில் தமிழகம் முதன்மையாக விளங்குகிறது- முதலமைச்சர் பழனிசாமி

மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக்கு பின் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி மக்களிடம் உரையாற்றினார். அப்போது. “மருத்துவமனையிலிருந்து படிப்படியாக பலர் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். இந்தியாவிலேயே மருத்துவச் சிகிச்சை அளிப்பதில் தமிழகம் முதன்மையாக விளங்குகிறது. சென்னையிலிருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் வேறு மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

edappadi palanisamy

மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கிறது. கோயம்பேட்டில் கொரோனா தொற்று ஏற்படும் என்று கணித்து முன்னரே வியாபாரிகளை எச்சரித்தோம். அரசின் எச்சரிக்கையை கோயம்பேடு வியாபாரிகள் முதலில் ஏற்கவில்லை. விற்பனை பாதிக்கும் என்ற எண்ணத்தில் வியாபாரிகள் இருந்ததால் கோயம்பேடு மூலம் தொற்று அதிகரித்தது. அரசு நடவடிக்கை எடுக்காததால் கோயம்பேட்டில் அதிகரித்தது என்று கூறுவது தவறு. 

வெளி மாநிலத்தில் உள்ள தமிழர்களை மீட்பதற்கு படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அரசின் நலத்திட்ட உதவிகள் மக்களுக்கு முழுமையாகச் சென்றடைவதை ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.