’இந்தியாவிலேயே சிறந்த கரகாட்டக் கோஷ்டின்னா அது விஷாலோடதுதான்’…காமெடி பண்ணும் கருணாஸ்…

 

’இந்தியாவிலேயே சிறந்த கரகாட்டக் கோஷ்டின்னா அது விஷாலோடதுதான்’…காமெடி பண்ணும் கருணாஸ்…

கடந்த முறை இதே துணைத்தலைவர் பதவியில் வென்றபிறகு நடிகர் சங்கம் சென்னையின் எந்தப் பகுதியில் உள்ளது என்பதைக் கூட மறந்து தீவிர அரசியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.கருணாஸ்,’இந்தியாவிலேயே ஒரு சிறந்த நடிகர் சங்கம் என்றால் அது விஷால், நாசர் கூட்டணியின் தென்னிந்திய நடிகர் சங்கம்தான்’ என்று ‘கரக்காட்டக்காரன் கவுண்டமணி பாணியில் காமெடி பண்ணுகிறார்.

karunas

இம்முறையும் மருபடியும் அதே விஷால் அணியில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் கருணாஸ், நேற்று சேலத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தார்.அப்போது பேசிய அவர்,”இந்தியாவிலேயே சிறப்பாக செயல்படும் நடிகர் சங்கம் என்றால் அது தென்னிந்திய நடிகர் சங்கம் தான். பாண்டவர் அணி சிறப்பாக செயல்படுகிறது. நடிகர் சங்க கட்டிடம் மூலம் வரும் வருமானத்தில் நலிந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை அதிகரிக்கப்படும். பாண்டவர் அணி அளித்த வாக்குறுதிகளை எல்லாம் முழுமையாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். 

karunas

தென்னிந்திய நடிகர் சங்க சொத்துக்கள் ஒரு காலமும் அடமானத்தில் செல்லக் கூடாது. நான் பதவியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி நாடகக் கலைஞர்களுக்கும், கிராமியக் கலைஞர்களுக்கும் என் மூச்சு உள்ள வரை குரல் கொடுத்துக் கொண்டே இருப்பேன். நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணியை எதிர்த்து போட்டியிட சிலர் முடிவு செய்துள்ளனர். திண்டுக்கல்லில் இருக்கும் எனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை முதிர்ந்த தென்னிந்திய நடிகர்களுக்கும், நாடக நடிகர்களுக்குமான முதியோர் இல்லம் கட்ட கொடுக்கப் போகிறேன். அம்மாவிடம் சீட்டு வாங்கி சட்டமன்ற உறுப்பினர் ஆனவன் நான். அவர் இல்லாத சட்டசபைக்கு செல்ல இஷ்டம் இல்லை’ என்றார்.

nadigar sangam

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலிலும் விஷாலின் பாண்டவர் அணி போட்டியிடுகிறது. பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும், துணை தலைவர்கள் பதவிக்கு கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்