இந்தியாவிற்கு எதிரான ஆஸ்திரேலிய அணிக்கு துணை கேப்டனான 7 வயது சிறுவன்!

 

இந்தியாவிற்கு எதிரான ஆஸ்திரேலிய அணிக்கு துணை கேப்டனான 7 வயது சிறுவன்!

இந்தியாவிற்கு எதிரான மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு துணை-கேப்டனாக 7 வயது சிறுவன் நியமிக்கப்பட்டுள்ளான்.

மெல்போர்ன்: இந்தியாவிற்கு எதிரான மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு துணை-கேப்டனாக 7 வயது சிறுவன் நியமிக்கப்பட்டுள்ளான்.

ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்தவர் ஆர்ச்சி சில்லர் என்ற 7 வயது சிறுவன், அரிய வகை இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். கிரிக்கெட் மீது அதீத ஆர்வம் கொண்ட அச்சிறுவன், உடல்நிலை காரணமாக விளையாட்டில் ஈடுபட முடியாத சூழலில் இருக்கிறான்.

archie

கிரிக்கெட் மீதான தன் அளவு கடந்த காதலையும், என்றேனும் ஒரு நாள் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக வர வேண்டும் என்கிற தன் வாழ்நாள் ஆசையையும் தன் தந்தையிடம் கூறியுள்ளான்.

நோயால் பாதிக்கப்பட்டுள்ள தன் மகனின் ஆசையையும், அவனது இயலாமையையும் உணர்ந்த சிறுவனின் தந்தை, இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரிடம் தெரிவித்துள்ளார்.

archie

அதன்பின், அச்சிறுவனுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்துவிட வேண்டும் என முடிவெடுத்த லாங்கர், வருகிற 26ம் தேதி மெல்போர்னில் நடைபெற இருக்கும் ‘பாக்சிங் டே’ டெஸ்ட்டில், ஆஸ்திரேலிய அணியின் துணை-கேப்டனாக ஆர்ச்சி சில்லர் சேர்க்கப்படுவார் என அறிவித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக, மெல்போர்னில் நேற்று நடைபெற்ற ரசிகர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன் மற்றும் விராட் கோலி ஆகியோருடன் ஆர்ச்சி சில்லர் கலந்து கொண்டான்.