இந்தியாவின் முதல் நடமாடும் டீக்கடையை திறந்த பெண்கள் – நாசர், ஐஸ்வர்யா ராஜேஷ் பங்கேற்பு

 

இந்தியாவின் முதல் நடமாடும் டீக்கடையை திறந்த பெண்கள் – நாசர், ஐஸ்வர்யா ராஜேஷ் பங்கேற்பு

இந்தியாவில் முதன்முறையாக பெண்கள் மட்டுமே நடத்தும் நடமாடும் டீக்கடையின் திறப்பு விழா சென்னையில் நடைபெற்றது.

சென்னை: இந்தியாவில் முதன்முறையாக பெண்கள் மட்டுமே நடத்தும் நடமாடும் டீக்கடையின் திறப்பு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்தியாவில் முதன்முறையாக பெண்கள் மட்டுமே நடத்தும் நடமாடும் டீக்கடையின் திறப்பு விழா சென்னையில் நடைபெற்றது. ரெட்ரோ ஃபிட் ஆட்டோ ரிக்க்ஷா மூலம் இந்த நடமாடும் டீக்கடை இயங்க உள்ளது. இந்த நடமாடும் டீக்கடையின் திறப்பு விழா கோடம்பாக்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் நாசர், நடிகை ஜஸ்வர்யா ராஜேஷ், விஜிபி சந்தோசம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளனர்.

ttn

இந்த ஆட்டோவை முழுக்க முழுக்க பெண்கள் நடத்தும் வகையில் உருவாக்கி இருக்கிறார்கள். இந்த நடமாடும் டீக்கடை மூலம் பெண்களாகவே ஆட்டோ ஓட்டி சென்று ஒவ்வொரு பகுதிக்கும் டீ வழங்க இருக்கிறார்கள். சென்னை மாநகரகம் அதிகமாக மாசுபட்டு இருக்கும் சூழலில் இந்த நடமாடும் டீக்கடையின் ஆட்டோ மின்சாரத்தால் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.