இந்தியன் 2 விபத்து: கமல்ஹாசனுக்கு மத்திய குற்றப்பிரிவுதுறை சம்மன்

 

இந்தியன் 2 விபத்து: கமல்ஹாசனுக்கு மத்திய குற்றப்பிரிவுதுறை சம்மன்

இந்தியன் 2 பட படப்பிடிப்பு விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவுத்துறை நடிகர் கமல்ஹாசனுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.

இந்தியன் 2 பட படப்பிடிப்பு விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவுத்துறை நடிகர் கமல்ஹாசனுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.

இந்தியன் – 2 படப்பிடிப்பு தளத்தில் ஏ‌ற்பட்ட கொடூர விபத்து தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளா‌க்கியது. சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே நிகழ்ந்த கோர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து திரைப்படத்தில் இணை இயக்குநராக பணியாற்றும் குமார் என்பவர் நரசதப்பேட்டை காவல்நிலையத்தில் லைகா நிறுவனம் மீது புகார் அளித்தார். அதில்,  தயாரிப்பு நிறுவனம் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை என்றும், கிரேன் ஆபரேட்டர் அஜாக்கிரதையாக செயல்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதனால் லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Kamalhassan

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனுக்கு மத்திய குற்றப்பிரிவுத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. வரும் செவ்வாய்கிழமை எழும்பூர் அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.