இந்தியன் 2 பிரச்னையில் சுமுகமான பேச்சுவார்த்தை; லைகா, ஷங்கர் தரப்பில் தகவல்!

 

இந்தியன் 2 பிரச்னையில் சுமுகமான பேச்சுவார்த்தை; லைகா, ஷங்கர் தரப்பில் தகவல்!

இந்தியன் 2 பட பிரச்சனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் மற்றும் இயக்குநர் ஷங்கர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படம் தயாராகி வருகிறது. கொரோனா பாதிப்பு, கிரேன் விழுந்து விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியன் 2 படப்பிடிப்பு தாமதமானது. இதனால் இயக்குனர் ஷங்கர் வேறு படங்களை இயக்க தொடங்கி விட்டார். இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்கக்கோரி லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்தியன் 2 பிரச்னையில் சுமுகமான பேச்சுவார்த்தை; லைகா, ஷங்கர் தரப்பில் தகவல்!

வழக்கை விசாரித்த நீதிபதி ஷங்கருக்கு அப்படி ஒரு உத்தரவைப் பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து விட்டார். இதையடுத்து லைகா நிறுவனம் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்த போது இந்தியன் 2 பட பிரச்சினை தொடர்பாக தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் இதற்கு தீர்வு காணும் முயற்சியில் பேச்சுவார்த்தை நடைபெறுவதால் நான்கு வார கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் லைகா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இயக்குனர் ஷங்கர் தரப்பிலும் அதே கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை 4 வாரங்கள் ஒத்திவைத்தனர்.