‘இந்தியன் 2 படத்திலிருந்து விலகியது வருத்தமளிக்கிறது’: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் குமுறல் 

 

‘இந்தியன் 2 படத்திலிருந்து விலகியது வருத்தமளிக்கிறது’: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் குமுறல் 

சென்னை: இந்தியன் 2 படத்திலிருந்து விலகியது வருத்தமாகவுள்ளதாக ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார். 

இந்தியன் படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் 22 வருடங்களுக்குப் பிறகு இந்தியன் 2 படம் எடுக்க முடிவு செய்தனர். அதன்படி ஷங்கர் இயக்கவுள்ள இந்த படத்தை  லைகா புரடக்‌ஷன் தயாரித்து வந்தது. இதில் முக்கிய வேடத்தில் காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

படத்தின் படப்பிடிப்பு evp பிலிம் சிட்டியில் பிரமாண்டமாக செட் அமைத்து நடைபெற்று வந்தது. ஆனால் கமல் அரசியல்,  பிக் பாஸ் என்று தொடர்ச்சியாக பிஸியாகி விட்டதால் படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. தற்போது மீண்டும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளதாக அறிவிப்பு வெளியானது. சமீபத்தில் இந்த படத்திலிருந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கியுள்ளதாக ஒரு செய்தி வெளியானது.

இந்த நிலையில் இது குறித்து ஐஸ்வர்யா ராஜேஷிடம் கூறுகையில், ‘நான் இந்தியன் 2 படத்திலிருந்து விலகியது உண்மை தான். ஏற்கனவே மற்ற படங்களுக்குக் கொடுத்திருந்த கால்ஷீட்டை இந்தப் படத்துக்காக மாற்ற முடியவில்லை. அதனால் சுமூகமாகப் பேசி இந்த படத்திலிருந்து வெளியேறிவிட்டேன். நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் படங்களில் நடிக்க முடியாதது வருத்தமளிக்கிறது. இது எனது கனவு படமும் கூட. அவர்களுடன் இணைந்து நடிக்க, மீண்டும் வாய்ப்புக் கிடைக்கும் என நம்புகிறேன்’  என்று தெரிவித்துள்ளார்.