‘இந்தியன் 2’ படத்திற்கு மணிரத்னம் இடைஞ்சல் | சமாளித்து மீள்வாரா ஷங்கர்

 

‘இந்தியன் 2’ படத்திற்கு மணிரத்னம் இடைஞ்சல் | சமாளித்து மீள்வாரா ஷங்கர்

எந்த நேரத்தில் ‘இந்தியன் 2’ என்னுடைய நடிப்பில் வெளிவரும் கடைசி படமாக இருக்கும் என்று கமல் அறிவித்தாரோ… இதோ ஷூட்டிங் ஆரம்பிச்சாச்சு… என்று புலி வருது கதையாக மாத கணக்கில்  தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. இத்தனைக்கும் படப்பிடிப்புக்காக நாள் கணக்கு வாடகையில் ஸ்டூடியோவில் செட் எல்லா போட்டு மாதக்கணக்கில் படப்பிடிப்புக்காக போடப்பட்ட செட்களில் யூனிட் ஆட்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

‘இந்தியன் 2’ படத்திற்கு மணிரத்னம் இடைஞ்சல் | சமாளித்து மீள்வாரா ஷங்கர்

எந்த நேரத்தில் ‘இந்தியன் 2’ என்னுடைய நடிப்பில் வெளிவரும் கடைசி படமாக இருக்கும் என்று கமல் அறிவித்தாரோ… இதோ ஷூட்டிங் ஆரம்பிச்சாச்சு… என்று புலி வருது கதையாக மாத கணக்கில்  தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. இத்தனைக்கும் படப்பிடிப்புக்காக நாள் கணக்கு வாடகையில் ஸ்டூடியோவில் செட் எல்லா போட்டு மாதக்கணக்கில் படப்பிடிப்புக்காக போடப்பட்ட செட்களில் யூனிட் ஆட்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

இந்நிலையில் ‘இந்தியன் 2’படத்தின் ஒளிப்பதிவாளராக அறிவிக்கப்பட்டிருந்த ரவிவர்மன், மணிரத்னம் அசுர வேகத்தில் முனைப்பு காட்டி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் பணியாற்ற ஓகே சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.
முழு கதையையும் சொல்லி, மனசுக்குள் ‘இந்தியன் 2’ படம் பற்றி ஒரு வரைப்படம் தயாரித்து வைத்திருந்த இயக்குநர் ஷங்கருக்கும், கமலுக்கும் ரவி வர்மா படத்திலிருந்து விலகியது அதிர்ச்சியை கொடுத்தது.

அரசியலில் பிஸியாகாமல், பிக் பாஸ் வீட்டில் பஞ்சாயத்து பண்ணிக் கொண்டிருக்கும் கமல், எப்படியும் மீண்டும் சினிமாவில் கல்லா கட்டி, மையத்தை மையமாக நிறுத்தியே தீர்வது என்கிற முடிவில்  இருப்பதால், அடுத்தடுத்து ‘தலைவன் இருக்கின்றான்’, வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனத்தின் முதலீட்டில் ‘மருத நாயகம்’ என்று தூசு தட்டி படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார்.

ஏற்கெனவே தனது நிறுவனத்தின் தயாரிப்பான ‘இம்சை அரசன்2’ படத்தின் பாதிப்பால் மனம் வெறுத்து கடுப்பில் இருந்த ஷங்கருக்கு ‘இந்தியன் 2’ படத்துக்கான தயாரிப்பாளர் பஞ்சாயத்து, கேமராமேன் மாற்றம் என்று கூடுதல் டென்ஷனை ஏற்படுத்தியது. இதையடுத்து அதிரடியாய் ‘இந்தியன் 2’ படத்திற்கு  ரத்னவேலுவை ஒளிப்பதிவாளராக தேர்ந்தெடுத்து மீண்டும் பரபரப்பாகியிருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.