இந்தியன் 2 படத்திற்கு அடுத்த சிக்கல்! கலக்கத்தில் படக்குழு!

 

இந்தியன் 2 படத்திற்கு அடுத்த சிக்கல்! கலக்கத்தில் படக்குழு!

கடந்த மாதம் நிகழ்ந்த இந்தியன் – 2 படப்பிடிப்பு தளத்தில் ஏ‌ற்பட்ட கொடூர விபத்து தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளா‌க்கியது. சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே நிகழ்ந்த கோர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து திரைப்படத்தில் இணை இயக்குநராக பணியாற்றும் குமார் என்பவர் நரசதப்பேட்டை காவல்நிலையத்தில் லைகா நிறுவனம் மீது புகார் அளித்தார். அதில்,  தயாரிப்பு நிறுவனம் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை என்றும், கிரேன் ஆபரேட்டர் அஜாக்கிரதையாக செயல்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதனால் லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்தியன் 2

இந்நிலையில் இப்படத்திற்கு தற்போது மீண்டும் ஒரு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அதாவது, ஆர்டிஸ்டுகளின் கால்ஷீட்களும் முடிவுக்கு வந்துட்டதால், தற்போது மீண்டும் எல்லா நடிகர் மற்றும் நடிகைகளுக்கும் கால்ஷீட் வாங்கி படப்பிடிப்பை தொடங்குவதற்கு காலதாமதம் ஆகும் என கூறப்படுகிறது. மேலும் கிரேன் விபத்து குறித்து போலீசார் விசாரணைக்கு நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் அழைத்துக் கொண்டே இருப்பதால் படப்பிடிப்பு தொடங்க மிகவும் காலதாமதம் ஆகிறது. இதனால் படக்குழு செய்வதறியாது திகைத்து நிற்கிறது.