இந்தியன் தாத்தா திரும்ப வருவார்! பிரியா பவானி சங்கர் தலையில் அடித்து சத்தியம்!

 

இந்தியன் தாத்தா திரும்ப வருவார்! பிரியா பவானி சங்கர் தலையில் அடித்து சத்தியம்!

மருத்துவமனையில் 20 ரூபாய் லஞ்சம் வாங்கும் வார்டுபாய்கள், பூங்காவில் படுத்து தூங்கும் புல்லுருவிகள், லட்ச ரூபாய் காண்ட்ராக்ட்டில் பத்தாயிரம் ஆட்டைய போடும் அதிதீவிர ஊழல்வாதிகள் உள்ளிட்டோரை கபளீகரம் செய்ய திரும்ப வருகிறார் இந்தியன் தாத்தா.

வழக்கமாக இயக்குநர் சங்கர் படங்கள் எப்போது வெளியாகும் என்ற கேள்வியைத்தான் கேட்ககூடாது என்பார்கள், ஆனால் இந்தியன் 2 படத்திற்கு வேறுவிதமான தொல்லை. லைகா, கமல், சங்கர், என பேப்பரில் கூட்டணி பலமாக இருந்தாலும் நிஜத்தில் மக்கள் நல கூட்டணி போலதான் அடுத்தடுத்த நடவடிக்கைகள் இருந்துவந்தன. கமலுக்கு மேக்கப் ஒத்துக்கொள்ளவில்லை, சங்கரின் பட்ஜெட்டை லைகா ஏற்றுக்கொள்ளவில்லை, லைகாவின் கண்டிஷன்களை சங்கர் ஏற்கவில்லை, பிக் பாஸ் காரணமாக கமல் கால்ஷீட் கிடைக்கவில்லை என நிறைய இல்லைகளுக்குப் பிறகு, படம் கிட்டத்தட்ட ட்ராப் என்ற முடிவுக்கே வந்துவிட்ட அந்த கடைசி நொடியில்தான் தெரியவருகிறது, ’அப்படி எல்லாம் அவ்ளோ ஈசியா இவ்ளோ பெரிய படத்தை ட்ராப் பண்ணிட மாட்டாங்க’ என்பது.

Priya Bhavani Shankar in indiaa 2

படத்தின் முதற்கட்ட வேலைகள் தொடர்ந்து நடந்துகொண்டிருப்பதையும், தானும் அதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதையும் பிரியா பவானி சங்கர் பேட்டியின்மூலம் உறுதிபடுத்தியுள்ளார். இயக்குநர் சங்கரின் அலுவலகத்தில் நடந்த ஆடிஷனில் கலந்துகொண்டதாகவும், இந்த கதையை மிஸ் செய்யப்போவதில்லை என்று உறுதிபூண்டுள்ளதாகவும் அப்பேட்டியில் பிரியா தெரிவித்துள்ளார். ஆக, மருத்துவமனையில் 20 ரூபாய் லஞ்சம் வாங்கும் வார்டுபாய்கள், பூங்காவில் படுத்து தூங்கும் புல்லுருவிகள், லட்ச ரூபாய் காண்ட்ராக்ட்டில் பத்தாயிரம் ஆட்டைய போடும் அதிதீவிர ஊழல்வாதிகள் உள்ளிட்டோரை கபளீகரம் செய்ய திரும்ப வருகிறார் இந்தியன் தாத்தா.