இத பண்ணுங்க பாஸ்… கொரோனா வராது! நித்தியானந்தாவின் டிப்ஸ்

 

இத பண்ணுங்க பாஸ்… கொரோனா வராது! நித்தியானந்தாவின் டிப்ஸ்

சிறுமிகள் கடத்தல், பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் பிரபல சாமியார் நித்தியானந்தா.

சிறுமிகள் கடத்தல், பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் பிரபல சாமியார் நித்தியானந்தா. இவர் கரீபியன் தீவுகள் பகுதியில் ஒரு சிறிய தீவை விலைக்கு வாங்கி, அதை கைலாசம் என்ற தனிநாடாக அறிவிக்கப்போவதாக கதைவிட்டார். இதற்காக தனி இணையதளம் தொடங்கப்பட்டது. லட்சக் கணக்கான மக்கள் குடியுரிமை கோரி விண்ணப்பித்ததாகவும் செய்திகள் வெளியாகின. இதை நம்பி தனக்கு பதவி எல்லாம் வேண்டும் என்று எஸ்.வி.சேகர் உள்ளிட்டவர்கள் வீடியோ வெளியிட்டனர். ஆனால், தனித் தீவு எல்லாம் வாங்கவில்லை என்றும் அகதியாகக் கூட அவரை ஏற்க முடியாது என்றும் சில நாடுகள் தெரிவித்தன. சர்வதேச போலீசாரல் தேடப்பட்டுவரும் நித்தியானந்தா, தொடர்ந்து யூடியூபில் சத்சங்கம் நிகழ்ச்சியில் உரையாற்றிவருகிறார். 

nithyananda

இந்நிலையில், தற்போது யூடியூபில் வெளியாகியுள்ள புதிய வீடியோவில், ”பச்ச பட்டினி விரதம் இருந்தால் கொரோனா வைரஸ் தாக்கது. எதிர்காலத்திலும் எங்களை கொரோனா வைரஸ் தாக்காது. பரமசிவன், காலபைரவரும் இருக்கும் வரை எங்களை எதுவும் செய்ய முடியாது. ஏனெனில் அவர்கள்தான் எங்கள் பாதுகாவலர்கள்” என தெரிவித்தார்.