இத்தாலியில் சிக்கிய தமிழக மாணவர்களை மீட்க வேண்டும்! – அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராமதாஸ் கோரிக்கை
இத்தாலியில் சிக்கியுள்ள 55 தமிழக மாணவர்களை மீட்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இத்தாலியில் சிக்கியுள்ள 55 தமிழக மாணவர்களை மீட்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இணை அமைச்சரை டேக் செய்து பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்வீட்களை வெளியிட்டுள்ளார்.
1.சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இத்தாலி நாட்டின் மிலன் நகரில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 55 பேரை மீட்டு தாயகம் அழைத்து வர மத்திய வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! @DrSJaishankar @MOS_MEA
— Dr S RAMADOSS (@drramadoss) March 11, 2020
அதில், “சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இத்தாலி நாட்டின் மிலன் நகரில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 55 பேரை மீட்டு தாயகம் அழைத்து வர மத்திய வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்!
இத்தாலியில் தமிழக மாணவர்களுக்கு, ‘கொரோனா பாதிப்பு இல்லை’ என்ற சான்றிதழ் கிடைப்பதில் ஏற்படும் தாமதம் தான் தாயகம் திரும்ப முடியாததற்கு காரணமாகும். உடனடியாக அவர்களுக்கு மருத்துவ ஆய்வு நடத்தி சான்றிதழ் கிடைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்!” என்று கூறியுள்ளார்.
2.இத்தாலியில் தமிழக மாணவர்களுக்கு, ‘கொரோனா பாதிப்பு இல்லை’ என்ற சான்றிதழ் கிடைப்பதில் ஏற்படும் தாமதம் தான் தாயகம் திரும்ப முடியாததற்கு காரணமாகும். உடனடியாக அவர்களுக்கு மருத்துவ ஆய்வு நடத்தி சான்றிதழ் கிடைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்!@MOS_MEA
— Dr S RAMADOSS (@drramadoss) March 11, 2020