இத்தாலியில் கொரோனா வைரஸுக்கு பலியானோர் எண்ணிக்கை 109 ஆக உயர்வு – அனைத்து பள்ளிகளும் மூடல்

 

இத்தாலியில் கொரோனா வைரஸுக்கு பலியானோர் எண்ணிக்கை 109 ஆக உயர்வு – அனைத்து பள்ளிகளும் மூடல்

இத்தாலியில் கொரோனா தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது.

ரோம்: இத்தாலியில் கொரோனா தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை பெருமளவில் அச்சுறுத்தி வருகிறது. இதுவரை சுமார் 80 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. மேலும் உலக அளவில் 3200-க்கும் மேற்பட்டோர் இந்த கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர்.

ttn

இந்த நிலையில், ஐரோப்பிய நாடான இத்தாலியில் கொரோனா தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அந்நாட்டில் இதுவரை 3 ஆயிரத்து 89 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருவதையடுத்து இத்தாலியில் உள்ள அனைத்து பள்ளிகளையும் வரும் 15 –ஆம் தேதி வரை மூட இத்தாலியில் அந்நாட்டு கல்வித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.