இத்தனை நாள் ஏன் செய்தியாளர்களை சந்திக்கவில்லை! எனக்கு பதில் பீலா ராஜேஷ் சந்தித்தற்கு காரணம் இதுதான்!! – விஜயபாஸ்கர்

 

இத்தனை நாள் ஏன் செய்தியாளர்களை சந்திக்கவில்லை! எனக்கு பதில் பீலா ராஜேஷ் சந்தித்தற்கு காரணம் இதுதான்!! – விஜயபாஸ்கர்

சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், சில நேரங்களில் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் தினமும் செய்தியாளர்களை சந்தித்துவந்த நிலையில் 3 வாரங்களுக்கு பிறகு, இன்று மாலை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்தார்.  தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பிரச்சினை அதிகரித்து வரும் நிலையில் அமைச்சர் பிரஸ்மீட் செய்யாமல் சுகாதாரத்துறை செயலாளரை வைத்து பிரஸ் மீட் செய்வது பொறுப்பை தட்டிக்கழிக்கும் செயல் என பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் நெட்டிசன்கள் குற்றஞ்சாட்டின.

vijayabaskar

இதற்கு இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், “நான் பல மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டியுள்ளது, வீடியோ கான்ஃபரன்சிங் செய்ய வேண்டியிருந்தது. அதனால்தான் முதல்வர் உத்தரவுபடி சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் கொரோனா குறித்த புள்ளி விவரங்களை வழங்கி வந்தார். இதுதானே தவிர, வேறு விதமான சிந்தனைக்கு நீங்கள் செல்லவேண்டாம்” என விளக்கமளித்துள்ளார்.