“இதை வெளியே சொன்னா கொன்னுடுவேன் “என்று மிரட்டியே தினம் தினம் பலாத்காரம் செய்யப்பட்ட பள்ளி சிறுமிகள் .
மதுபன் கிராமத்தைச் சேர்ந்த ஒன்பது மற்றும் பத்து வயதுடைய இரண்டு சகோதரிகள் அந்த கிராமத்தில் மேல்நிலைப்பள்ளியில் படிக்கின்றனர்.பள்ளிக்கு செல்லும் வழியில் இரண்டு இளைஞர்கள் அவர்களை தினம் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலத்தின் மவு மாவட்டத்தில் இரண்டு மைனர் சகோதரிகளை தினம் தினம் மிரட்டி சில இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
மதுபன் கிராமத்தைச் சேர்ந்த ஒன்பது மற்றும் பத்து வயதுடைய இரண்டு சகோதரிகள் அந்த கிராமத்தில் மேல்நிலைப்பள்ளியில் படிக்கின்றனர்.பள்ளிக்கு செல்லும் வழியில் இரண்டு இளைஞர்கள் அவர்களை தினம் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
அதே நேரத்தில்,அந்த இளைஞர்கள் இதை யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியிருந்தனர்.அவர்களுக்குப் பயந்து,சகோதரிகள் இந்த சம்பவம் பற்றி யாரிடமும் சொல்லவில்லை,ஆனால் அவர்கள் வெளியூரில் வசிக்கும் தங்கள் மூத்த சகோதரியிடம் சொன்னார்கள்.அந்த பெண் தனது கணவரிடம் கூற ,அவர் போலீசாரிடம் புகாரளித்தார்
போலீசார் விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் கைது செய்துள்ளனர் மற்றும் சிறுமிகள் இருவரும் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.