இதை விட அது தான் முக்கியம் – பிரச்சாரத்தை ஒத்தி வைத்து விட்டு கோவை செல்லும் கமல்

 

இதை விட அது தான் முக்கியம் – பிரச்சாரத்தை ஒத்தி வைத்து விட்டு கோவை செல்லும் கமல்

கோவையில் கூட்டு பாலியல் வன்புணர்விற்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் இன்று கோவை செல்ல இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோவை :

கோவையில் கூட்டு பாலியல் வன்புணர்விற்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் இன்று கோவை செல்ல இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறுமி கொலை 

கோவையில் தன் வீட்டின் அருகிலேயே சடலமாக மீட்கப்பட்ட  7 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை  ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி சம்பவத்தின் அதிர்ச்சியே இன்னும் விலகாத நிலையில் இந்த சம்பவம் கோவை மக்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார், தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். 

கோவை வழக்கு

ஏற்கனவே, கோவையில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமியின் குடும்பத்திற்கு சட்டரீதியான அனைத்து உதவிகளையும் மக்கள் நீதி மய்யம் செய்து தரும் என அக்கட்சியின் துணை தலைவர் மகேந்திரன் தெரிவித்திருந்தார்.

ஆறுதல் சொல்ல செல்லும் கமல் 

இன்று தான் இறந்த குழந்தையின் உடற்கூறாய்வு முடிவுகள் வெளி வந்து அதில் அவர் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளார் என்பது தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று கோவை செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கமல்

இதற்காக மத்திய மற்றும் வடசென்னை பகுதிகளில் இன்று பிரச்சாரம் செய்ய இருந்த கமல், அதை ஒத்தி வைத்து விட்டு கோவை செல்ல இருக்கிறாராம். பிற்பகல் 2 மணியளவில் கோவை செல்ல இருக்கும் கமலஹாசனுடன் வழக்கறிஞர் ஒருவரும் செல்ல இருப்பதாகத் தெரிகிறது.

 

இதையும் படிங்க 

டோக்கன் கொடுத்து ஏமாற்றியது போல் பரிசு கொடுத்து ஏமாற்ற முடியாது: டி.டி.வி.யை விமர்சித்த அ.தி.மு.க அமைச்சர்