இதைச் செய்தால் என் கணவர் என்னைக் கொன்று விடுவார்! சமந்தா வெளியிட்ட ரகசியம்

 

இதைச் செய்தால் என் கணவர் என்னைக் கொன்று விடுவார்! சமந்தா வெளியிட்ட ரகசியம்

தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகையான சமந்தா எப்போதும் செய்திகளில் இடம் பிடித்த வண்ணம் உள்ளார். தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 96 திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானு திரைப்படத்தில் த்ரிஷாவின் கதாபாத்திரத்தில் சமந்தா நடித்திருக்கிறார். இந்த படத்தின் வெளியீட்டிற்கு பின்பு பல பேட்டிகளை அளித்து வருகிறார். 

தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகையான சமந்தா எப்போதும் செய்திகளில் இடம் பிடித்த வண்ணம் உள்ளார். தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 96 திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானு திரைப்படத்தில் த்ரிஷாவின் கதாபாத்திரத்தில் சமந்தா நடித்திருக்கிறார். இந்த படத்தின் வெளியீட்டிற்கு பின்பு பல பேட்டிகளை அளித்து வருகிறார். 

jaanu-movie

ஒரு நேர்காணலில் சமந்தா பேசிய போது தனது வேலை-மற்றும் திருமண வாழ்வின் சமநிலையை எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதை தெரிவித்திருந்தார்.  “நான் வழக்கமாக மாலை 6 மணிக்குப் பிறகு படப்பிடிப்பில் இருக்க மாட்டேன். வீட்டிற்கு திரும்பியதும், என் நேரத்தை முழுவதும் நாக சைதன்யாவுக்குத தான். நான் ஒரு படத்தில் நடிக்கும் கதாபாத்திரத்தை என் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பு வாசலில் வைத்து விட்டுதான் உள்ளே செல்வேன். நான் அப்படி செய்யவில்லை என்றால் அவர் (கணவர்) என்னைக் கொன்றே விடுவார்” என்று தெரிவித்தார்.

chai-sam

ரங்கஸ்தலம் படத்தைப்  பற்றி பேசிய சமந்தா “அந்த படத்தின் ஸ்கிரிப்டைப் கூடா படிக்காமல் தேர்வு செய்தேன்” என்று கூறினார்  ‘தி ஃபேமிலி மேன் 2’ என்ற வெப் சீரிஸில் நடித்துக்கொண்டிருக்கிறார் சமந்தா. இந்த சீரிஸில் இவருக்கு சில ஆக்ஷன் காட்சிகள் உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.