இதே கேள்வியை நாங்கள் அமைச்சரிடம் கேட்டால்? ரஜினிகாந்த் அதிரடி

 

இதே கேள்வியை நாங்கள் அமைச்சரிடம் கேட்டால்? ரஜினிகாந்த் அதிரடி

ஜெயலலிதா இருந்தபோது நீங்கள் எப்படி இருந்தீர்கள் என நாங்கள் அமைச்சர்களிடம் கேட்டால் எப்படி இருக்கும் என ரஜினிகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை: ஜெயலலிதா இருந்தபோது நீங்கள் எப்படி இருந்தீர்கள் என நாங்கள் அமைச்சர்களிடம் கேட்டால் எப்படி இருக்கும் என ரஜினிகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இல்லாமல் நடிகர்களுக்கு குளிர்விட்டு போய்விட்டது என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சமீபத்தில் கூறியிருந்தார். அவரது இந்த பேச்சு பல்வேறு தரப்பினரிடத்தில் விமர்சனத்தை எழுப்பியது. மேலும், ஜெயலலிதா இல்லாமல் அமைச்சர்களுக்குத்தான் குளிர்விட்டு போய்விட்டது என பலர் கூறினர்.

இந்நிலையில், ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், நல்ல பதவியில் இருக்கும் அமைச்சர்கள் பேசும்போது கவனமாக பேச வேண்டும். ஜெயலலிதா இருந்தபோது நீங்கள் எப்படி இருந்தீர்கள் என்று அமைச்சர்களை நோக்கி நாங்கள் கேட்டால் எப்படி இருக்கும்? என கேள்வி எழுப்பினார். மேலும் அவர் பேசுகையில், இலவசங்கள் 100% தேவை ஆனால் அதை யாருக்கு எதற்கு கொடுக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.