“இதெல்லாம் சேர்ந்ததுதான் கர்ணன்”… படத்தின் கதையைப் பற்றி கூறிய மாரி செல்வராஜ்

 

“இதெல்லாம் சேர்ந்ததுதான் கர்ணன்”… படத்தின் கதையைப் பற்றி கூறிய மாரி செல்வராஜ்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் புதிய படம் கர்ணன். அசுரன் படத்தின் வெற்றிக்கு பின்னர் தனுஷின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. பரியேறும் பெருமாள் மூலம் ஒரு அழுத்தமான கதையை கொடுத்த மாரி செல்வராஜ் தற்போது மற்றொமொரு சமூக பிரச்னையை அடிப்படையாகக்  கொண்டு தான் எடுத்து வருகிறார் என்று பரவலாகப் பேசப்படுகிறது. கர்ணன் பட தலைப்பு மாற்றுமாறும் பல்வேறு கண்டனங்கள் எழுந்தன. 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் புதிய படம் கர்ணன். அசுரன் படத்தின் வெற்றிக்கு பின்னர் தனுஷின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. பரியேறும் பெருமாள் மூலம் ஒரு அழுத்தமான கதையை கொடுத்த மாரி செல்வராஜ் தற்போது மற்றொமொரு சமூக பிரச்னையை அடிப்படையாகக்  கொண்டு தான் எடுத்து வருகிறார் என்று பரவலாகப் பேசப்படுகிறது. கர்ணன் பட தலைப்பு மாற்றுமாறும் பல்வேறு கண்டனங்கள் எழுந்தன. 

mari-selvaraj

தற்போது கர்ணன் படத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இது பற்றிப் பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ் “யாருடைய குரலுக்கு உடனடியாகப் பதில் கிடைக்கிறது, யார் கேட்டால் சீக்கிரம் கிடைக்கிறது, யாருடைய குரல் கண்டுகொள்ளப்படாமல் விடப்படுகிறது, அப்படிக் கண்டுகொள்ளாமல் விடுவதற்கான காரணம் என்ன… இதெல்லாம் சேர்ந்ததுதான் கர்ணன்” என்றார். 

mari-selvaraj-karnan

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் இந்த படத்திற்கு முன்பாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.