“இது வெளியில் தெரிந்தால் குடும்பத்திற்கு அவமானம் ஏற்படும்” : 2 மகள்களை கொன்ற தாய் பரபரப்பு வாக்குமூலம்!

 

“இது வெளியில் தெரிந்தால் குடும்பத்திற்கு அவமானம் ஏற்படும்” : 2 மகள்களை கொன்ற தாய் பரபரப்பு வாக்குமூலம்!

மகள்களும்  உள்ளனர்.  கனகராஜ் தனது அண்ணன் குடும்பத்தினருடன் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறார். 

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த சமுத்திரம் காந்திநகரை சேர்ந்தவர் கட்டட தொழிலாளி கனகராஜ். இவருக்கு சாந்தமீனா என்ற மனைவியும், லோகநாதன்(15) என்ற மகனும், கோகிலா(13), லலிதா(11) என்ற இரு மகள்களும்  உள்ளனர்.  கனகராஜ் தனது அண்ணன் குடும்பத்தினருடன் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறார். 

tt

கடந்த 20 ஆம் தேதி சாந்தமீனா வேலைக்கு சென்றிருந்த நிலையில், இவரின் மகள்கள் இருவரும்  வீட்டில் மயக்க நிலையில் கிடந்தனர். இதையடுத்து  அவர்கள் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் மேல் சிகிச்சைக்காக  திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் சகோதரிகள்  இருவரும் சிகிச்சை பலனின்றி  பலியாகினர். 

tt

இதுகுறித்து  சமுத்திரம் கிராம நிர்வாக அலுவலர் சிவகாமி மூலம் மணப்பாறை காவல்நிலையத்தில் சிறுமிகளின் தாய் சாந்தமீனா சரணடைந்தார். இதுகுறித்து அவர் அளித்த வாக்குமூலத்தில், ‘நாங்கள் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறோம்.  தனது கணவரின் சகோதரர் வைத்திருக்கும் பணம் அவ்வப்போது காணாமல் போனது.  அதை என்  மகள்கள் எடுத்துள்ளனர். இது வெளியில் தெரிந்தால்  குடும்பத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டுவிடும் என்ற பயத்தில் கூல் ட்ரிங்க்ஸில்  விஷம் கலந்து கொடுத்தேன்’ என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.   

tt

இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் சிவகாமி அளித்த புகாரின்பேரில் மணப்பாறை போலீசார், சாந்தமீனாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.